ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் லெஜன்ட் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
தொழிலதிபர் லெஜன்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் லெஜன்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படப்பிடிப்பில் கலந்து கொண்ட யோகிபாபுவுக்கு படக்குழுவினர்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லெஜன்ட் சரவணன்
இப்படத்தில் நடித்து வந்த நடிகர் விவேக் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்ததால், அவருக்கு பதில் யோகி பாபு நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.
[embedded content]
Source: Malai Malar