Press "Enter" to skip to content

ஓடிடியில் வெளியான படங்களை திரையிட மாட்டோம் – திரையரங்க உரிமையாளர்கள் திட்டவட்டம்

ஓடிடி விற்பனைக்கான படங்களின் பிரிவியூ காட்சிக்கும் திரையரங்குகள் வழங்குவதில்லை என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால், தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட்டு வந்தனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஓடிடி-யில் வெளியாகி வெற்றிபெற்ற படங்களை திரையரங்கில் வெளியிட முனைப்பு காட்டி வந்தனர். 

இதுதொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், ஓடிடியில் வெளியான திரைப்படங்களை திரையிரங்குகளில் வெளியிடபோவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

மேலும் திரையரங்கில் வெளியாகும் படங்கள் 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடி-யில் வெளியிடப்படும் என்றால் மட்டுமே ஒப்பந்தம் போடப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஓடிடி விற்பனைக்கான படங்களின் பிரிவியூ காட்சிக்கும் திரையரங்குகள் வழங்குவதில்லை என இந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »