சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அரண்மனை 3’ படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் 2 பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது. தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்தையும் சுந்தர்.சி தான் இயக்கி உள்ளார்.
இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.
அரண்மனை 3 படத்தின் விளம்பர ஒட்டி
இந்நிலையில், ‘அரண்மனை 3’ படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், இப்படத்தின் வெளியீடு தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுதபூஜை பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
[embedded content]
Source: Malai Malar