Press "Enter" to skip to content

கோவிலில் சாமி பார்வை செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கோவிலில் சாமி பார்வை செய்து இருக்கிறார்கள்.

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். மேலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். அதோடு, மும்பையிலுள்ள சித்தி விநாயகர், மஹாலட்சுமி கோவில், மும்பதேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளனர்.

இந்தப் புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »