Press "Enter" to skip to content

ஓடிடி-யில் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்கும் சசிகுமார்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் சசிகுமார், பட வெளியீட்டில் நடிகர் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க உள்ளார்.

சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய சசிகுமார் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கிடாரி, உடன்பிறப்பே உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். 

தற்போது இவர் நடிப்பில் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ திரைப்படம் உருவாகி உள்ளது. பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்தில் மிருநாளினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

எம்.ஜி.ஆர்.மகன், ஜெய் பீம் படங்களின் விளம்பர ஒட்டி

இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் வெளியீடு தேதியையும் வெளியிட்டுள்ளது. அதன்படி ‘எம்.ஜி.ஆர்.மகன்’ திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ஹாட்விண்மீன் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் தீபாவளியையொட்டி ஓடிடி-யில் வெளியாக உள்ளதால், இந்த இரு படங்களுக்கு இடையே நேரடிப் போட்டி உருவாகி உள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »