Press "Enter" to skip to content

திரையரங்கம்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி

தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள், கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் தளர்வுகளையும் அறிவித்துள்ளார்.

அதன்படி, நவம்பர் 1ம் தேதி முதல் திரையரங்கம்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 

திரைப்படம் படப்பிடிப்புகளுக்கு முழு அனுமதி:

தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள், கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »