Press "Enter" to skip to content

தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய் வேதனை

சொகுசு தேர் இறக்குமதி வழக்கில் தனி நீதிபதி கூறிய கருத்துக்கள் தன்னை புண்படுத்தின என முறையிட்டுள்ள விஜய், அதனை நீக்கக்கோரி மேல்முறையீடு செய்துள்ளார்.

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு தேர் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அதன்பின் கட்ட வேண்டிய வரி பாக்கியை செலுத்திவிட்டார். என்றாலும், தனி நீதிபதியின் கருத்துகளை நீக்க வேண்டும் என விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீடு மனு விசாரணையின்போது, பொதுப்படையாக நடிகர்களுக்கு எதிராக தெரிவிக்கும் கருத்து தேவையற்றது. 

உயர்நீதிமன்ற தனி நீதிபதி கருத்து தனிப்பட்ட முறையில் தன்னை புண்படுத்தியுள்ளது. 32.30 லட்சம் ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்டு விட்டது. கஷ்டப்பட்ட உழைப்பில் தேர் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது என விஜய் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »