Press "Enter" to skip to content

சோதனைகளை சாதனையாக்க பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்… யார் தெரியுமா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் அடுத்த போட்டியாளர் பற்றிய புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 5-வது பருவம் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் பருவம் 5-ன் தலைப்பை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவ்னியும் பிடித்தனர்.

பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிமுகம் செய்வதாக அறிவிப்பு வெளியானது.

ஜூலி

அதன்படி நேற்று முதல் போட்டியாளராக சினேகன் செல்ல இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தற்போது பிக்பாஸ் முதல் பருவத்தில் அதிகம் பேசப்பட்ட ஜூலி, 2வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் செல்ல இருப்பதாக புரமோ வெளியாகியுள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »