தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்புவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. சமீபத்தில் இவர் நடித்து வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாக இருந்தது. 2015-இல் பீப் பாடலின் சர்ச்சைக்காக சிம்பு மற்றும் அனிருத் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
சிம்பு – அனிருத்
இந்நிலையில் கோவை நீதிமன்ற விசாரணை அறிக்கையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிராக வழக்குகளை ரத்து செய்யக்கோரிய நடிகர் சிம்பு மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[embedded content]
Source: Malai Malar