Press "Enter" to skip to content

கலாய்த்த இணையப் பயனாளர்கள்.. நெத்தியடி கொடுத்த விஜய்

நடிகர் விஜய் வாக்களிக்க வந்த சிவப்பு நிற காருக்கு காப்பீடு இல்லை என்று கலாய்த்த இணையப் பயனாளர்களுக்கு நெத்தியடி கொடுக்கும் படி பதிலளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர். அந்த வகையில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சிவப்பு நிற காரில் வந்தார். அவரது இல்லத்தில் இருந்தே ரசிகர்கள் புடை சூழ வந்த விஜய், நீலாங்கரை வேல்ஸ் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

அவர் பயணித்து வந்த சிவப்பு நிற காருக்கு காப்பீடு செலுத்தவில்லை அதில் தான் விஜய் வாக்களிக்க வந்தார் என்று இணையப் பயனாளர்கள் பலரும் கலாய்த்து வந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் விஜய் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விஜய் வந்த காருக்கு வருகிற மே 28, 2022 ஆண்டு வரை காப்பீடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »