தலாய் லாமா சண்டிகரில் ஒரு புத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது அங்கு அவர் குழந்தைக்கு முத்தம் கொடுத்துள்ளார். அதன் பிறகு அந்த காணொளி சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்டுிய நிலையில் தற்போது அது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சர்ச்சை என்ன?:
பொது மன்றத்தில் சிறு குழந்தையை முத்தமிட்டதற்காக புத்த மத தலைவர் தலாய் லாமா மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபத்தில் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் காணொளி இணையதளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. அதில் அவர் ஒரு குழந்தையின் உதட்டில் முத்தமிடுவதைக் காண முடிகிறது. இந்த காணொளிவுக்கு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, தலாய் லாமா சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்டு இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காணொளியில்…:
மரியாதை செலுத்துவதற்காக தலாய் லாமா குழந்தையின் உதடுகளை முத்தமிடுகிறார். பின்னர் தலாய் லாமா தனது நாக்கை நீட்டி குழந்தையைத் தொடக் கூறுகிறார்.
தலாய் லாமா சிறுவனிடம், “என் நாக்கைத் தொட முடியுமா?” என்று கேட்பது தெளிவாக கேட்கிறது.
கண்டனங்கள்:
சமூக ஊடக பயனாளர் ஒருவர் இது அநாகரீகமானது என்றும் தலாய் லாமாவின் இந்த நடத்தையை யாரும் நியாயப்படுத்த வேண்டாம் என்றும் எழுயுள்ளார். இந்த காணொளிவுக்கு கடுமையாக பதிலளித்துள்ள மற்றொரு ட்விட்டர் பயனாளர் தலாய் லாமாவை கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் இவர்தான் தலாய்லாமா? இது கேவலமானது எனவும் பதிவிட்டுள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: அனல் மின்நிலையம் வெளியேற்றும் புகை…. குழந்தைகளை பாதிக்கும் தோல் நோய்கள்!!
Source: Malai Malar