Press "Enter" to skip to content

“என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே…” ED ரைடு குறித்து பாடல் பாடிய அமைச்சர்!!

அனைத்தையும் இழந்து 13 வயது மகனை காப்பாற்றப் போராடும் தம்பதி; அரசு உதவ கண்ணீரோடு கோரிக்கை வைத்த தந்தை.

வாய் இருந்தும் உணவு உன்ன முடியாமல், பேச முடியாமல், உறுப்புகள் இருந்து செயல்பாடுகள் இன்றி முடங்கிப் போன சிறுவனின் வாழ்க்கை போராட்டத்தை அனைத்தையும் இழந்து காப்பாற்ற போராடும் பெற்றோரின் கதறல் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பூமார்க்கெட் சந்து பகுதியில் வசிப்பவர் பரக்கத்துல்லா. இவரது மனைவி ஹிதாயத்து நிஷா. இந்த தம்பதியினரின் ஒரே மகன் முகம்மது உசேன் வயது 13. மூளை வளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே அவரது குடும்பத்தினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

3 வயதில் சிறுவனுக்கு இரைப்பை தொடர்பான ஒரு அறுவை சிகிச்சை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் தண்ணீர், உணவு என எதுவாக இருந்தாலும் வயிற்றுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள குழாய் மூலம் தான் கொடுக்க முடியும். ஓவ்வொரு கட்டத்திலும் தன் மகனுடன் வாழ வேண்டும் என்பதால் இந்த தம்பதியினர் மகனை காப்பாற்றும் நோக்கில் ஆரம்பத்தில் இருந்தே அனைத்து மருத்துவ சிகிச்சைக்கும் கொண்டு சென்று வருகின்றனர்.

இரைப்பையே செயற்கையாக பொருத்தப்பட்டிருப்பதால் 3 மாதங்களுக்கு ஒருமுறை சிறுவனை வேலூர் அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுவனை பரிசோதனை செய்ய வேண்டும், தினமும் 3 ஊசிகள் சிறுவனுக்கு செலுத்த வேண்டும், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வயிற்றில் பொருத்தப்பட்டுள்ள குழாய் மூலம் உணவு, குடிநீர் வழங்கிட வேண்டும், இதுமட்டுமின்றி வயிற்றில் பொருத்தப்பட்டுள்ள குழாயை 40 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் மாதம் ஒருமுறை சுமார் 8 ஆயிரத்திற்கு மருந்து மாத்திரைகள் வாங்க வேண்டும். இப்படியாக இப்போது சிறுவனை பராமரிக்க ஒரு மாதத்திற்கு சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை தம்பதியினர் செலவு செய்து வருகின்றனர். ஆனால் திருச்சியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பரக்கத்துல்லா ஊழியராக வேலை பார்த்து வருகிறார். எல்லாவற்றையும் விற்று விட்டு மகனை காப்பாற்ற போராடும் தம்பதி தற்போது வாடகை வீட்டில் தான் வசித்து வருகின்றனர்.

 

ஆனால் இப்போது வாடகை கூட கொடுக்க முடியாத நிலைக்கு சென்று விட்டார். தான் வாழும் காலம் வரை மகனை காப்பாற்றிட வேண்டும் என்ற ஒன்றை நோக்கத்தை தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாமல் இருக்கும் தம்பதியினர் சிறுவனுக்கு மருந்து மாத்திரைகள், வயிற்றில் பொருத்தப்பட்டுள்ள குழாய், உணவிற்கு அரசு உதவினால் தாங்கள் வாழும் காலம் வரை சிறுவனை வைத்து பராமரித்துக் கொள்வோம். மேலும் வாடகை கூட கொடுக்க முடியாத நிலைக்கு சென்று விட்ட நிலையில் அரசின் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்கி உதவிட வேண்டும் என்று பரக்கத்துல்லா, ஹிதாயத்து நிஷா தம்பதியினர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூளை வளர்ச்சி குன்றிய மகனாக இருந்தாலும் சிறுவனால் வாய் பேச முடியாது, ஏதும் சொல்ல முடியாது, தனக்கு பசித்து விட்டால் சிறிய சப்தம் ஒன்றை கொடுக்கிறார். அதன் மூலம் அவருக்கு பசி ஏற்படுவதை உணரும் தம்பதி உடனே குழாய் மூலம் பிரத்யேகமாக உள்ள உணவை கொடுக்கின்றனர். மகனை காப்பாற்ற போராடும் தம்பதியினரின் செயல் காண்போரின் கண்களை குளமாக்கி விடுகின்றது. அரசு இந்த சிறுவனுக்கு விரைந்து உதவி செய்து தேவையான சிகிச்சைகளை இலவசமாக கிடைத்திட வழி செய்திட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நல்ல நிலையில் பிறக்கும் குழந்தைகளையே சாலையோரத்தில் வீசிச் செல்லும் பெற்றோருக்கு  மத்தியில், இத்தனை போராட்டங்களுக்கு மத்தியிலும், தனது மகனை தூக்கிச் சுமக்கும் இந்த பெற்றோரின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

இதையும் படிக்க    | முதியவரை கவனிக்க ஆள் இல்லை… சாலையில் தூக்கி போட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள்!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »