பிரதமர் மோடி சர்வதேச அளவில் புகழ் பெற்ற தொலைநோக்கு பார்வையாளராகவும், பல்துறை மேதையாகவும் விளங்குகிறார் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அருண் மிஸ்ரா கூறியுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச நீதித்துறை கருத்தரங்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அருண் மிஸ்ரா நன்றியுரை ஆற்றினார்.
அவர் பேசும்போது, ‘‘பிரதமர் மோடி சர்வதேச அளவில் புகழ் பெற்ற தொலைநோக்கு பார்வையாளராகவும், பல்துறை மேதையாகவும் விளங்குகிறார். அவர் உலகளவில் சிந்திக்கிறார், உள்ளூர் அளவில் செயல்படுகிறார். பிரதமர் மோடி நிர்வாகத்தின்கீழ் இந்தியா, சர்வதேச சமுதாயத்தில் பொறுப்புள்ள, மிகவும் நட்பான உறுப்பு நாடாக விளங்குகிறது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நீதித்துறை சவால்களை சந்திப்பது பொதுவானது. உலகின் ஒவ்வொரு மாற்றத்திலும் நீதித்துறைக்கு முக்கிய பங்கு உள்ளது’’ என்றார்.
Related Tags :
Source: Maalaimalar