பஹ்ரைனில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் 182 இந்தியர்கள் நேற்று நள்ளிரவு கேரளாவின் கொச்சி வந்தடைந்தனர்.
திருவனந்தபுரம்:
கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அதன் காரணமாக விமான சேவைகள் முடங்கின.
வெளிநாடுகளில் சிக்கித் தவித்து, தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களை படிப்படியாக மீட்டு அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மே 7-ம் தேதி முதல் அதற்கான பயணம் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 64 விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டு அவர்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு துவங்கியுள்ளது
இந்நிலையில், பஹ்ரைனின் மனாமாவிலிருந்து 182 இந்தியர்கள் கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கினர். இதில் 5 குழந்தைகளும் அடங்குவர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உளளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Source: Maalaimalar