Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 14 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மகப்பேறு மருத்துவமனை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட, 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான், ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. 

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசுப் படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப் படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில் தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சமீபகாலமாக அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பல கிராமங்களை மீட்டுவருகின்றனர். இதனால் ராணுவத்திற்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது பயங்கர மோதல்கள் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் மேற்கே அமைந்துள்ள மகப்பேறு மருத்துவமனையில் நேற்று பயங்கரவாதிகள் திடீரென புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். 

இந்த கொடூர தாக்குதலில் பிறந்த குழந்தைகள் இருவர், அவர்களின் தாயார்கள், நர்சுகள் உள்பட 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »