நலிவடைந்த நிலையில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.
அவர் கூறுகையில்:-
நலிவடைந்த நிலையில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் விதமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியாக வழங்க வசதி செய்து கொடுக்கப்படும்.
இந்த கடனுதவி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்து மீண்டு வர பெரும் உதவியாக இருக்கும்.
Related Tags :
Source: Maalaimalar