Press "Enter" to skip to content

100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி: நிர்மலா சீதாராமன்

100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 12-ந்தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், இதுபற்றிய விரிவான தகவல்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.

கடந்த நான்கு நாட்களாக பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்நிலையில்ஐந்தாவது நாளாக இன்று நிலம், பணப்புழக்கம், தொழிலாளர் நலன், மருத்துவம், 100 நாள் வேலைத்திட்டம், கல்வி, பொதுத்துறை உள்பட 7 அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அவர் பேசும்போது கூறியதாவது:-

1. 100 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. பட்ஜெட்டில் 61 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது கூட்டப்பட்டுள்ளது.

2. அனைத்து மாவட்டங்களில் தொற்றுநோய் தடுப்பு மையம். பொது சுகாதார ஆய்வு மையங்களை அனைத்து வட்ட அளவிலும் அமைக்கப்படும்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »