தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரியிலும் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
மத்திய அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பாக ஆலோசிப்பதற்காக புதுச்சேரியில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாளை முதல் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகளை திறந்து மது விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. இதன்மூலம் மது விற்பனையில் புதுச்சேரி மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளது.
Related Tags :
Source: Maalaimalar