ரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி உள்ளது.
மாஸ்கோ:
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 49.43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.22 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யா நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் ஒரு நாளின் சராசர பாதிப்பு விகிதம் 10 ஆயிரமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த அதிபர் புதின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி உள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,99,941 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு மேலும் 115 பேர் உயிரிழந்ததால், அங்கு பலி எண்ணிக்கை 2,837 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 76,130 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Related Tags :
Source: Maalaimalar