Press "Enter" to skip to content

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா வைரஸ் தொற்று தகவல் குறித்து அறிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது.

639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தமாக 10,548 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம்.

பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அச்சப்பட தேவையில்லை. சென்னையில் மட்டும் 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு விஜய பாஸ்கர் பேசினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »