Press "Enter" to skip to content

தலைநகரை உலுக்கும் கொரோனா – இன்று ஒரே நாளில் 2,224 பேர் பாதிப்பு

தலைநகர் டெல்லியில் 2,224 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்தது.

புதுடெல்லி:

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மேலும் 2,224 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41,182 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இன்று 878 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 15,823 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 1,327 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »