தஜிகிஸ்தானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
துஷான்பே:
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இன்று காலை 7 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துஷான்பே நக இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 341 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பல்வேறு கட்டுமானங்கள் சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, திறந்தவெளியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் 7.03 மணியளவில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது.
Related Tags :
Source: Maalaimalar