Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 27 ஆயிரம் பேர் – மாவட்ட வாரியாக விவரங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 27 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 112 அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 794 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-

அரியலூர் – 45

செங்கல்பட்டு – 1,850

சென்னை – 18,372

கோவை – 114

கடலூர் – 328

தர்மபுரி – 15

திண்டுக்கல் – 95

ஈரோடு – 10

கள்ளக்குறிச்சி – 93

காஞ்சிபுரம் – 603

கன்னியாகுமரி – 78

கரூர் – 33

கிருஷ்ணகிரி – 38 

மதுரை – 452

நாகை – 152

நாமக்கல் – 3

நீலகிரி – 17

பெரம்பலூர் – 7

புதுக்கோட்டை – 49

ராமநாதபுரம் – 184

ராணிப்பேட்டை – 232

சேலம் – 148

சிவகங்கை – 49

தென்காசி – 153

தஞ்சாவூர் – 177

தேனி – 105

திருப்பத்தூர் – 43

திருவள்ளூர் – 1,176

திருவண்ணாமலை – 727

திருவாரூர் – 126

தூத்துக்குடி – 244

திருநெல்வேலி – 212

திருப்பூர் – 6

திருச்சி – 147

வேலூர் – 377

விழுப்புரம் – 203

விருதுநகர் – 68

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 145

உள்நாடு – 92

ரெயில் நிலைய கண்காணிப்பு – 210

மொத்தம் – 27,178

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »