தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 516 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 1,227 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 339 அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 39 பேர்
உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 833 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-
அரியலூர் – 43
செங்கல்பட்டு – 1,945
சென்னை – 18,889
கோவை – 126
கடலூர் – 336
தர்மபுரி – 25
திண்டுக்கல் – 133
ஈரோடு – 14
கள்ளக்குறிச்சி – 125
காஞ்சிபுரம் – 661
கன்னியாகுமரி – 79
கரூர் – 31
கிருஷ்ணகிரி – 33
மதுரை – 574
நாகை – 93
நாமக்கல் – 2
நீலகிரி – 31
பெரம்பலூர் – 17
புதுக்கோட்டை – 50
ராமநாதபுரம் – 202
ராணிப்பேட்டை – 252
சேலம் – 136
சிவகங்கை – 49
தென்காசி – 162
தஞ்சாவூர் – 184
தேனி – 153
திருப்பத்தூர் – 34
திருவள்ளூர் – 1,312
திருவண்ணாமலை – 797
திருவாரூர் – 133
தூத்துக்குடி – 259
திருநெல்வேலி – 211
திருப்பூர் – 4
திருச்சி – 170
வேலூர் – 409
விழுப்புரம் – 209
விருதுநகர் – 93
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 147
உள்நாடு – 96
ரெயில் நிலைய கண்காணிப்பு – 209
மொத்தம் – 28,428
Related Tags :
Source: Maalaimalar