Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 28 ஆயிரத்து 400 பேர் – மாவட்ட வாரியாக விவரங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 516 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 1,227 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 339 அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 39 பேர்

உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 833 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-

அரியலூர் – 43

செங்கல்பட்டு – 1,945

சென்னை – 18,889

கோவை – 126

கடலூர் – 336

தர்மபுரி – 25

திண்டுக்கல் – 133

ஈரோடு – 14

கள்ளக்குறிச்சி – 125

காஞ்சிபுரம் – 661

கன்னியாகுமரி – 79

கரூர் – 31

கிருஷ்ணகிரி – 33 

மதுரை – 574

நாகை – 93

நாமக்கல் – 2

நீலகிரி – 31

பெரம்பலூர் – 17

புதுக்கோட்டை – 50

ராமநாதபுரம் – 202

ராணிப்பேட்டை – 252

சேலம் – 136

சிவகங்கை – 49

தென்காசி – 162

தஞ்சாவூர் – 184

தேனி – 153

திருப்பத்தூர் – 34

திருவள்ளூர் – 1,312

திருவண்ணாமலை – 797

திருவாரூர் – 133

தூத்துக்குடி – 259

திருநெல்வேலி – 211

திருப்பூர் – 4

திருச்சி – 170

வேலூர் – 409

விழுப்புரம் – 209

விருதுநகர் – 93

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 147

உள்நாடு – 96

ரெயில் நிலைய கண்காணிப்பு – 209

மொத்தம் – 28,428

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »