பாகிஸ்தானில் ஒரே நாளில் 4,044 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.92 லட்சத்தை கடந்துள்ளது.
இஸ்லாமாபாத்:
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.92 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,92,970 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 044 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்கு கொரோனாவால் ஒரே நாளில் 148 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 3,903 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
Related Tags :
Source: Maalaimalar