Press "Enter" to skip to content

4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணம் – ரஷிய பிரதமர்

ரஷியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 4 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த முயற்சியில் ஈடுபட்டுவரும் நாடுகளில் ஒன்றான ரஷியா உள்நாட்டு தயாரிப்பான 4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று கூறுகையில், ’நாட்டில் மொத்தம் 17 அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக 26 வகையிலான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மனித நல்வாழ்வு கண்காணிப்பதற்கான கூட்டாட்சி சேவையின் தகவலின் அடிப்படையில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளது. மேலும், இரண்டு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. இவை ஹமேல்யா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பாதுகாப்பு துறையின் கூட்டு ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. 

அதேபோல்  மேலும், இரண்டு தடுப்பூசிகள் தொடக்க நிலை பரிசோதனையில் உள்ளன. இவை வைராலஜி, பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம்

மற்றும் தடுப்பூசிகள் மற்றும் சீரம் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு வருகிறது’’ என அவர் தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »