Press "Enter" to skip to content

ஈரானை உலுக்கும் கொரோனா – 3 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

ஈரானில் ஒரே நாளில் 2,636 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.

டெஹ்ரான்:

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஈரானிலும் வேகமாகப் பரவி வருகிறது. 

இந்நிலையில், ஈரானில் ஒரே நாளில் 2,636 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. 

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,98,909 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானில் ஒரே நாளில் 196 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 343 ஆக உயர்ந்துள்ளது. 

வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 2.59 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஈரான் 11-வது இடத்தில் உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »