Press "Enter" to skip to content

கேரளாவில் மேலும் 1569 பேருக்கு கொரோனா – 40 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு

கேரளாவில் மேலும் 1,569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலத்தில் மேலும் 1,569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் ஒரே நாளில் 1,569 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

தற்போது 14,094  பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனாவில் இருந்து 26,996 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »