Press "Enter" to skip to content

குவாரியில் வெடிவிபத்து- புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

எர்ணாகுளம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், மலயாத்தூர் பகுதியில் உள்ள குவாரியில் இன்று அதிகாலை வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

உயிரிழந்த இருவரில் ஒருவர் தமிழகத்தின் சேலத்தை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »