மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 263 காவல் துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் முன்கள பணியாளர்களான போலீசாரும் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் புதிதாக 163 காவல் துறையினருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் மொத்த எண்ணிக்கை 21,574 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 17,797 காவல் துறையினர் குணமடைந்துள்ள நிலையில், இன்று வரை மொத்தம் 229 காவல் துறையினர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது மகாராஷ்டிரா காவல் துறையில் 3,548 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
Related Tags :
Source: Maalaimalar