Press "Enter" to skip to content

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மேலும் 372 பேருக்கு தொற்று உறுதி

புதுச்சேரியில் மேலும் 372 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் சுகாதாரத் துறை மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 372 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,400 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 513 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 443 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,648 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை புதுச்சேரியில் 5,239 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »