Press "Enter" to skip to content

கூடுதல் தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மாத தொடக்கத்தில் மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்து, மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து மற்றும் தொடர் வண்டி போக்குவரத்து தொடங்கியுள்ளது.

இந்நிலையில், செப்டம்பர் 30-ம் தேதியுடன் பொது முடக்கம் நிறைவடைய உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

தளர்வுகளால் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பது பற்றியும், மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை உபகரணங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »