தமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நாளையுடன் முடிவடையும் நிலையில், மருத்துவக்குழு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் அக்டோபர் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் புறநகர் தொடர் வண்டி சேவைக்கு அனுமதி இல்லை. பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை. திரைப்படம் திரையரங்கம்கள் திறக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar