அபு தாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 194 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிதத்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் மட்டையாட்டம் தேர்வு செய்தது.
குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் மக்கள் விரும்பத்தக்கது காட்டினர். 4.5 சுற்றில் 49 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது மும்பை முதல் மட்டையிலக்குடை இழந்தது. டி காக் 15 பந்தில் 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 10-வது ஓவரின் முதல் பந்தில் 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை 9.2 சுற்றில் 88 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
கடந்த போட்டியில் 4 பந்தில் 20 ஓட்டங்கள் அடித்ததால் குருணால் பாண்ட்யா முன்னதாக களம் இறக்கப்பட்டார். ஆனால் இன்று 17 பந்தில் 12 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை 14 சுற்றில் 117 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
ஆனால் மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் குவித்தார். 33 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்தில் 79 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 19 பந்தில் 30 ரன்களும் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 193 ஓட்டங்கள் குவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar