மகாராஷ்டிராவில் இன்று 12 ஆயிரத்து 134 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:
இந்தியாவில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டது.
அந்த தகவலின்படி, மாநிலத்தில் மேலும் 12 ஆயிரத்து 134 பேருக்கு புதிதாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 6 ஆயிரத்து 018 ஆக அதிகரித்துள்ளது.
நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 491 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 17 ஆயிரத்து 323 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 29 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 302 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 732 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar