Press "Enter" to skip to content

மகாராஷ்டிராவில் அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு- உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது என அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் 11-ம் தேதி  அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோன பெருந்தொற்று காரணமாக தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வந்தன. 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் நடைபெற இருந்த அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது என அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பல்வேறு மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »