Press "Enter" to skip to content

ரஷ்யாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது

ரஷ்யாவில் மேலும் 12126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மாஸ்கோ:

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் இதுவரை 3.50 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12,126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 12,72,238 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு மேலும் 201 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 257 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2.4035 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »