வார்னர், விருத்திமான் சாஹா வாணவேடிக்கை நிகழ்த்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 220 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை பதிவு செய்தார்.
அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் – விருத்திமான் சாஹா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
ஐந்து சுற்றில் 55 ஓட்டங்கள் குவித்தது. ரபடா வீசிய 6-வது சுற்றில் வார்னர் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 22 ஓட்டங்கள் விளாசினார். இதனால் பவர் பிளேயில் டெல்லி 77 ஓட்டங்கள் குவித்தது. வார்னர் 25 பந்தில் அரைசதம் அடித்தார்.
இருவரையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று டெல்லி பந்து வீச்சாளர்களுக்கு தெரியாமல் போனது. 8.4 சுற்றில் ஐதராபாத் 100 ஓட்டத்தில்த் தொட்டது.
10-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த சுற்றில் வார்னர் 34 பந்தில் 66 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மணிஷ் பாண்டு களம் இறங்கினார்.
வார்னர் ஆட்டமிழந்த பின்னர் சாஹா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 27 பந்தில் அரைசதம் அடித்தார். 12.5 சுற்றில் ஐதராபாத் 150 ஓட்டத்தில்க் கடந்தார். 15-வது ஓவரை நோர்ட்ஜே வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் 45 பந்தில் 87 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சாஹா ஆட்டமிழந்தார்.
17.3 சுற்றில் ஐதராபத் 200 ஓட்டத்தில்த் தொட மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 31 பந்தில் 44 ஓட்டங்கள் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 சுற்றில் 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 219 ஓட்டங்கள் குவித்தது. சிறந்த பவுலரான ரபடா 4 சுற்றில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar