Press "Enter" to skip to content

மேலும் ஒரு மத்திய மந்திரிக்கு கொரோனா

சமூக நீதித்துறை இணை மந்திரியாக பதவி வகிக்கும் ராம்தாஸ் அத்வாலேவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மும்பை:

கொரோனா தொற்றால் மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிதின் கட்காரி, பிரகலாத் சிங் பட்டேல், தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் செகாவத், அர்ஜூன் ராம்மேக்வால், ஸ்ரீபாத் நாயக், கைலாஷ் சவுத்திரி ஆகியோர் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டனர்.

ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் மேலும் ஒரு மத்திய மந்திரிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

சமூக நீதித்துறை இணை மந்திரியாக பதவி வகிக்கும் ராம்தாஸ் அத்வாலேவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

60 வயதான ராம்தாஸ் அத்வாலேக்கு நீரிழிவு நோய் உள்ளது. கொரோனா பாதிப்பை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »