Press "Enter" to skip to content

ஸ்பெயினில் ஒரே நாளில் 18,418 பேருக்கு கொரோனா

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 418 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

மாட்ரிட்:

ஸ்பெயினில் கொரோனா பரவல் 2-வது அலை வீசி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 418 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 267 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுதான் 2-வது அலையில் ஒரே நாளில் அதிகபட்ச உயிரிழப்பு ஆகும்.

இத்துடன், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 16 ஆயிரத்து 738 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »