Press "Enter" to skip to content

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடைமழை (கனமழை) பெய்யக்கூடும் என சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் அடைமழை (கனமழை) தொடர்பாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்,  தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் அடைமழை (கனமழை) நீடிக்கும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை  காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடைமழை (கனமழை) பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு:-  மயிலாப்பூர்  20 செ.மீ, சென்னை டிஜிபி அலுவலகம் 18 செ.மீ, அண்ணா பல்கலை கழகம் – 14 செ.மீ., செங்குன்றம் 13 செ.மீ.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »