Press "Enter" to skip to content

ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்டும் நடவடிக்கையில் மாநில அரசுகளுக்கு இரண்டாம் கட்ட இழப்பீடாக ரூ. 6 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் ஒரே வரியான ஜிஎஸ்டி-யை நடைமுறைக்கு கொண்டு வந்ததால் மாநில அரசுகள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. இதை சரி கட்ட மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.

ஆனாலும், மாநில அரசுகளுக்கு ஒதுக்கவேண்டிய இழப்பீட்டு நிதியை வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக பல மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

இதற்கிடையில், மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியின் முதல் தொகுப்பாக ரூ.6 ஆயிரம் கோடியை கடந்த 23 ஆம் தேதி 16 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருந்தது.

இந்நிலையில். ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியின் இரண்டாவது தொகுப்பை மத்திய அரசு இன்று ஒதுக்கியுள்ளது. அதன்படி மேலும், ரூ. 6 ஆயிரம் கோடியை 16 மாநிலங்களுக்கும், 3 யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »