Press "Enter" to skip to content

தமிழகத்தில் இன்று 2481 பேருக்கு கொரோனா தொற்று- 31 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 29 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 940 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 98 ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »