ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதில் வெற்றி பெற்றால் பிளேஆஃப்ஸ் சுற்று உறுதி என்ற நிலையில் டாஸ் வென்றது டெல்லி அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது.
ஆர்சிபி அணி:-
1. ஜோஷ் பிலிப், 2. தேவ்தத் படிக்கல், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. வாஷிங்டன் சுந்தர், 6. ஷிவம் டுபே, 7. ஷபாஸ் அகமது. 8. கிறிஸ் மோரிஸ், 9. இசுரு உடானா, 10, முகமது சிராஜ், 11. சாஹல்.
டெல்லி அணி:-
1. ஷிகர் தவான், 2. பிரித்வி ஷா, 3. ரகானே, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பண்ட், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. டேனியல் சாம்ஸ், 8. அக்சார் பட்டேல், 9. அஸ்வின், 10. ரபடா, 11. அன்ரிச் நோர்ஜே.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar