தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்தாலும் விராட் கோலி, டி வில்லியர்ஸ் மீண்டும் ஏமாற்றம் அளிக்க டெல்லிக்கு 152 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி.
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. ஆர்சிபி-க்கு எதிராக டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஆர்சிபி அணியின் ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் ஆர்சிபி-யின் ஸ்கோர் மந்தமாகவே உயர்ந்தது.
ஜோஷ் பிலிப் 12 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 29 ஓட்டத்தில் ஏமாற்றம் அடைந்தார். அப்போது ஆர்சிபி 12.3 சுற்றில் 82 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்து 50 ரன்னிலேயே வெளியேறினார்.
அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் 21 பந்தில் 35 ஓட்டங்கள் எடுத்து கடைசி ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழக்க, ஷிவம் டுபே 11 பந்தில் 17 ஓட்டங்கள் அடிக்க, ஆர்சிபி 20 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 152 ரன்களே அடித்தது.
டெல்லி அணியில் நோர்ஜோ 3 மட்டையிலக்குடும், ரபடா 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar