ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய மனைவி, குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, கடந்த சில நாட்களில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar