Press "Enter" to skip to content

உயர்திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உயர்திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் உயர்திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும்,

* சென்னை கிண்டியில் சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்

* சென்னை நொளம்பூர், பெரம்பலூரில் கட்டப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டடங்கள்

* மதுரையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்துக்கு ரூ.5 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடம்

ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார்.

இதையடுத்து வாணியம்பாடியில் ரூ.20.37 கோடியில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைக்க ஒப்பந்தமும் கையெழுத்தானது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »