Press "Enter" to skip to content

பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது – 26 மணிநேர கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்

பி.எஸ்.எல்.வி, சி-49 ராக்கெட் நாளை (சனிக்கிழமை) மாலை 3.02 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 26 மணி நேர கவுண்ட்டவுன் இன்று மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ். எல்.வி. சி-49 ராக்கெட், நாளை (சனிக்கிழமை) மாலை 3.02 மணிக்கு 1-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது. இந்த விண்வெளிவிமானம் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.

அத்துடன், இந்த விண்வெளிவிமானம் வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்கும்.

பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 44.4 மீட்டர் உயரம் கொண்டது பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்.

இது இந்தியாவின் 51-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 26 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து ’கவுண்ட்டவுனை’ முடித்து கொண்டு திட்டமிட்டப்படி நாளை மாலை 3.02 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

மேற்கண்ட தகவலை விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »