அபு தாபியில் நடக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்று அபு தாபியில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது.
இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஆர்சிபி அணியில் ஆரோன் பிஞ்ச் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சகா இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக கோஸ்வாமி சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆர்சிபி அணியில் ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, ஆடம் ஜம்பா சேர்க்கப்பட்டுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:-
1. வார்னர், 2. கோஸ்வாமி, 3. மணிஷ் பாண்டே, 4. பிரியம் கார்க், 5, ஜேசன் ஹோல்டர், 6. அப்துல் சமாத், 7. ரஷித் கான், 8. ஷாபாஸ் நதீம், 9. சந்தீப் சர்மா, 10. டி. நடராஜன், 11. கேன் வில்லியம்சன்,
ஆர்சிபி அணி:
1. ஆரோன் பிஞ்ச், 2. தேவ்தத் படிக்கல், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. மொயீன் அலி, 6. வாஷிங்டன் சுந்தர், 7. ஷிவம் டுபே, 8. நவ்தீப் சைனி, 9. ஆடம் ஜம்பா, 10. முகமது சிராஜ், 11. சாஹல்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar