Press "Enter" to skip to content

சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு 132 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி

அபு தாபியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 132 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்று அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஆர்சிபி அணியில் ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, ஆடம் ஜம்பா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சகா இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக கோஸ்வாமி சேர்க்கப்பட்டுள்ளார்.

தேவ்தத் படிக்கல் உடன் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கினார். விராட் கோலி 6 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 1 ரன்னிலும் ஜேசன் ஹோல்டர் பந்தில் வெளியேறினார். 3.3 சுற்றில் 15 ரன்னுக்குள் தொடக்க வீரர்களை இழந்ததும் ஆர்சிபி திணறியது. பவர் பிளேயில் 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 32 ரன்களே எடுத்தது.

3-வது மட்டையிலக்குடுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 7 சுற்றுகள் தாக்குப்பிடித்து விளையாடியது. என்றாலும் 41 ரன்களே அடித்தது. ஆரோன் பிஞ்ச் 32 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த மொயீன் அலி ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். டி வில்லியர்ஸ் அரைசதம்  அடித்தாலும் முக்கியமான கட்டத்தில் 18-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் டி நடராஜனிடம் ஸ்டம்பை பறிகொடுத்தார். டி வில்லியர்ஸ் 43 பந்தில் சிக்ஸ் ஏதும் அடிக்காமல் 5 பவுண்டரியுடன் 56 ஓட்டங்கள் அடித்தார்.

ஷிவம் டுபே 8, வாஷிங்டன் சுந்தர் 5 ஓட்டத்தில் ஏமாற்றம் அடைந்தனர். நவ்தீப் சைனி 9 ரன்களும், முகமது சிராஜ் 10 ரன்களும் அடிக்க ஆர்சிபி 20 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 131 ஓட்டங்கள் அடித்துள்ளது.

ஐதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »